Posts

Showing posts from June, 2026

பூங்குன்றம்

Image
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டி ஊருக்கு இயற்கை மரபு நடை பயணமாக 21.06.2026 அன்று காலை சேறல் மரபாண்மை சூழலியல் ஆய்வு நடுவம் சார்பாக சென்று இருந்தோம். உலகப் புகழ்ப் பெற்ற வரிகளான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என பாடிய சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் மகிபாலன்பட்டி என இன்று அழைக்கப்படுகின்ற ஊரில் பிறந்ததாக கருதப்படுகிறது.    தொல்லியல் ஆய்வாளர் மற்றும் தொல்மரபுக் குழு நிறுவனர் கா.காளிராசா, தாவரவியல் ஆய்வாளர் நே.கார்த்திகேயன், மகிபாலன்பட்டி முன்னாள் ஊராட்சிமன்றம் தலைவர் விஜய பாஸ்கர், பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கர்ணன், பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர்கள், கா. சக்திவேல், சேறல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தவம், கேசவன், தமிழ்தாசன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். செட்டிநாட்டு பாணியின் கட்டப்பட்ட நகரத்தார் வீடுகளின் அழகியத் தோற்றம் நம்மை மகிபாலன்பட்டிக்குள் வரவேற்றன. பூங்குன்றம் (எ) மகிபாலன்பட்டி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள திருப்பூங்குன்றமுடைய நாயனார் குடைவரைக்கோயில் வெளிப...